ஆந்திர மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 19 பேர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் அடிக்கடி செம்மரம் வெட்டுவது தொடர்பாக செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வந்த நிலையில்,  60 லட்சம் ரூபாய் மதிப்புலான 21 செம்மரக்கட்டைகள், ஒரு லாரி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், செம்மரம் வெட்ட பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.