கர்நாடக மாநிலத்தில் நடந்த மற்றொரு கௌரவ கொலை சற்றுமுன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தலித் இளைஞர் ஒருவருடன் காதலித்து ஓடியதற்காக தந்தை ஒருவர் தனது மகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். கர்நாடக மாநிலம் நாகநாதபுரத்தில் உள்ள டாக்டர் லே-அவுட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மைசூர் எச்டி கோட்டை பகுதியைச் சேர்ந்த காளிஹுண்டி கணேசனுக்கு 17 வயதில் பல்லவி என்ற ஒரு மகள் உள்ளார்.

பல்லவி ஒரு தலித் இளைஞனை காதலித்து வந்துள்ள நிலையில் அவர் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் அவமானமடைந்த அந்த பெண்ணின் தந்தை திட்டமிட்டபடி மகளை கொடூரமாக கௌரவ கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.