சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து இருப்பதால் தற்போது அதனை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த 297 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக ஐந்து பணியாளர்களைக் கொண்ட 16 குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தெருநாய்களின் தொல்லை குறித்து 1913 என்ற எண்ணில் புகார் அளித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.