சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து இருப்பதால் தற்போது அதனை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த 297 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக ஐந்து பணியாளர்களைக் கொண்ட 16 குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தெருநாய்களின் தொல்லை குறித்து 1913 என்ற எண்ணில் புகார் அளித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் தெரு நாய் தொல்லையை ஒழிக்க… 5 பேர் கொண்ட 16 குழுவினர்… நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை…!!!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more