சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. ஒப்பந்த முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க  தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் மயமாகுதலை கண்டித்து  சி ஐ டி யு தொழிற்சங்கம் சார்பாக பேருந்து பணிமனைகள் முன்பாக நாளை காலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.