ஆன்லைன் ரம்மியால் சென்னையில் அடுத்தடுத்த நாட்களில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரி ஆளுநர் ரவியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மார்ச் 17ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது அறிவித்திருக்கிறார். மேலும் சவப்பெட்டிகளுடன் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.