புதுடெல்லி ஷஹபாத் பால் பண்ணை பகுதியில் தன் 16 வயது காதலியை மிக கொடூரமாக கத்தியால் குத்தி கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் 20 வயதுள்ள சாஹில் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். உத்தரபிரதேசம் புலந்த்ஷாஹரில் சாஹில் கைது செய்யப்பட்டார்.

சிறுமியை கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கு இருந்து தப்பியோடிய குற்றவாளியை கைது செய்ய டெல்லி காவல்துறையினர் 6 தனிப்படைகளை அமைத்து உள்ளனர். சிறுமி இறந்து கொண்டுவரப்பட்ட நிலையில், உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமியின் உடலில் பல காயங்கள் இருந்தது..