UIDAI நாட்டு மக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கி வருகிறது. இதன் வாயிலாக உங்களது ஆதார் கார்டை நீங்கள் இலவசமாக புதுப்பிக்கலாம். இந்நிலையில் இதுகுறித்த முடிவை மார்ச் மாதம் UIDAI எடுத்தது. இதற்காக நாட்டு மக்கள் my Aadhaar போர்ட்டலுக்கு செல்லவும். இதில் இலவசமாக ஆவணங்களை புதுப்பிக்கும் முறை வழங்கப்பட்டு உள்ளது.

இதில் முக்கிய விஷயம் என்னவெனில் இந்த இலவச சேவை மார்ச் 15 முதல் ஜூன் 14 வரை மட்டும் செல்லுபடியாகும். அதன்பின் ஆதார் கார்டில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்ய கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். இச்சேவை myAadhaar போர்ட்டலில் மட்டுமே இலவசம் என்பதை ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் நினைவில்கொள்ள வேண்டும்.