ராகவா லாரன்ஸ் இப்போது நடித்திருக்கும் திரைப்படம் “ருத்ரன்”. இந்த படத்தின் வாயிலாக ஃபைவ் ஸ்டார் கதிரேசன் டைரக்டராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். வரும் 14-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்த நிலையில் ருத்ரன் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இவ்விழாவில் ராகவா 150 குழந்தைகளை தத்தெடுத்து இருப்பதாக தெரிவித்து உள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில் “150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வியை புது முயற்சியாக வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு உங்கள் அனைவரின் ஆசியும் வேண்டும்” என புகைப்படத்துடன் பதிவிட்டு உள்ளார். இவரது பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.
I’m extremely happy to share the news of adopting 150 children and provide them with education as a new venture from rudhran audio launch. I need all your blessings #Serviceisgod 🙏🏼 pic.twitter.com/lSwns10Grs
— Raghava Lawrence (@offl_Lawrence) April 11, 2023