மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் எனவும் தங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எனினும் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை. ஆகவே இவ்வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என நடிகர் தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன்(70) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கதிரேசன் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், வழக்கின் விசாரணைக்காக அவரது மரபணுவை (டி.என்.ஏ) சேகரித்து பாதுகாக்க வேண்டும் எனவும் அவரது மனைவி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர் டைட்டஸ் போன்றோர் மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.