வந்தே பாரத் ரயில்களை 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று முதல் வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும். இந்திய ரயில்வே வரலாற்றில் இது முதல் முறை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் மூலம் வந்தே பாரத் ரயில்களின் பெட்டிக்கு நான்கு பேர் வீதம் அனைத்து பெட்டிகளிலும் ஒரே நேரத்தில் தூய்மை பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.