இந்தியாவில் கர்ப்பை புற்றுநோய் பெண்களிடையே பரவும் பொதுவான நோய்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 133 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய புற்றுநோய் பதிவு திட்டம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் கருப்பை புற்றுநோய் பாதிப்பு 10 சதவீதம் ஆகும். இந்த வகை நோய் 90 சதவீதம் கோலோமிக் எபிட்டிலியம் அல்லது மீசோதெலியத்தின் செல்களிலிருந்து உருவாகின்றன.