கடலூர் மாவட்டத்தில் உள்ள மணப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் அஞ்சுகம், சுதா, ஜோதி, உள்ளிட்ட 11 பெண்கள் விவசாய கூலி வேலை பார்ப்பதற்காக செம்மேடு பகுதிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை ஹரிஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் எஸ்.ஏரி பாளையம் சாலையில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற போது ஜானகிராமன் என்பவர் ஓட்டி கொண்ட ஆட்டோ ஹரிஷ் ஓட்டி வந்த ஆட்டோ மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஹரிஷ், ஜானகிராமன் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.