மத்திய அரசின் ஆயுத காவல் படைக்கான காவலர் தேர்வு முதல் முறையாக 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளது. அதன்படி 26,146 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் 128 நகரங்களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை இந்த தேர்வை 48 லட்சம் பேர் எழுத உள்ளனர்.