கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் தம்பிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற கார்த்திகா பிற்பகல் இடைவெளியில் மதிப்பெண் பேப்பரை வாங்கி செல்வதற்காக முதல் மாடியில் இருக்கும் ஆசிரியையை பார்க்க சென்றார். அப்போது திடீரென கார்த்திகா மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் கார்த்திகாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் கார்த்திகாவுடன் பேசுவதை சக மாணவிகள் நிறுத்தியதாகவும், அதனால் மன உளைச்சலில் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.