விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், ஆனந்த், சந்திரன், சம்பத், பிரகாஷ் மற்றும் பாலகுரு என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.