நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு முதல் தற்போது வரை கோவை குனியமுத்தூரை சேர்ந்த ஜெயிலாபுதீன் என்பவர் தனசேகரிடம் 12,80,000 ரூபாய்க்கு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை வாங்கியதாக கூறப்படுகிறது. அதற்குரிய பணத்தை ஜெயிலாபுதீன் கொடுக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த தனசேகர் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போது சுவிட்ச் ஆப் என வந்தது. இது தொடர்பாக தனசேகர் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.