கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் தோப்பு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீஜித் கொல்லங்கோடு பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஸ்ரீஜித் தனது நண்பர்கள் 6 பேருடன் மார்த்தாண்டன்துறை கடல் பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் நண்பர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ராட்சத அலை ஸ்ரீஜித்தை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் ஸ்ரீஜத்தை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்களால் காப்பாற்ற இயலவில்லை. இதுகுறித்து அறிந்த மீனவர்கள் கடலுக்குள் இறங்கி தண்ணீரில் மூழ்கி இருந்த ஸ்ரீஜித்தின் உடலை மீட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.