சென்னை – கன்னியாகுமரி தொழில் தடை திட்டத்தின் கீழ் மோகனூரில் இருந்து நாமக்கல் சேந்தமங்கலம் வழியாக ராசிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணி மற்றும் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை திட்டத்தின் தலைமை பொறியாளர் செல்வன் ராசிபுரம் முதல் நாமக்கல் வரை சென்று நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

இந்த ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் செல்வநாதன் மற்றும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர். அப்போது சாலையின் தரம் மற்றும் செயலாக்கம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து விரிவாக்க பணிக்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடும் பணியையும் அவர் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து பணிகள் தரமாகவும் கொடுக்கப்பட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.