கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று முகூர்த்த நாளை முன்னிட்டு திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் மலையில் இருக்கும் மண்டபத்தில் 80 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதே போல் கோவிலை சுற்றி இருக்கும் தனியார் மண்டபங்களிலும் 30 திருமணங்கள் என மொத்தம் 110 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

ஒரே நாளில் 110 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால் ஏராளமான வாகனங்களில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் கடலூர்- பாலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.