மும்பை கண்டிவாலி என்ற பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கிரிஷா, தொடர்ந்து 110 நாட்களாக சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்துள்ளார். தினமும் சுடுதண்ணீர் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்துள்ளார். இவர் முதலில் 16 நாட்கள் மட்டுமே விரதம் இருக்க திட்டமிட்டுருந்த நிலையில் தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததால் 26, 31, 51 நாள் என படிப்படியாக தன்னுடைய இலக்கை விரிவாக்கி இறுதியாக 110 நாட்கள் வரை தாக்கு பிடித்துள்ளார்.

இவர் கடந்த ஜூலை 11ஆம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். 110 நாட்கள் நிறைவு செய்து புதிய சாதனையை இவர் படைத்துள்ளார். மேலும் உண்ணாவிரதம் இருந்ததால் 18 கிலோ எடை குறைத்துள்ளதாகவும் இவர் கூறியுள்ள நிலையில் மன உறுதி மற்றும் மன ஒருமைப்பாடு இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என கூறியுள்ளார்.