புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை மற்றும் விவசாயிகளுக்கு கடனுதவி, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை என பல சலுகைகள் வழங்கப்படும் நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட்டது.

அதன் பிறகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் விதமாக இலவச வேட்டி சேலைக்கு பதில் 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எஸ்சி எஸ்டி பிரிவினருக்கான உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.