ஒடிசா ரயில் விபத்தில் 11 தமிழர்களை அடையாளம் காண முடியவில்லை என்று தமிழக அரசுக் குழுவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். தற்போது வரை உயிரிழந்த 296 பேரில் 160 பேரின் அடையாளம் தெரியவரவில்லை. அதே நேரம் 11 தமிழக குடும்பத்தினர் போட்டோக்களுடன் அவர்களது உறவினர்களை தேடி வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைக்க இன்னும் சற்றுநேரத்தில் தமிழக அரசுக் குழுவினர் ஆலோசனை நடத்தவுள்ளனர்.