தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி எஸ்பி.ஆக சமய் சிங் மீனா, திண்டுக்கல் எஸ்பியாக பிரதீப், சென்னை பெருநகர போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐஜியாக தமிழ் சந்திரன், சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினராக டி ஜி பி கல்பனா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.