தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களுக்கு உதவ பிரபலங்கள் பலரும் முன்வந்துள்ள நிலையில் நிவாரணத் தொகை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் புயல் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திரை துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக அக்கறையுடன் நிதி உதவி அளித்து வரும் நிலையில் சூரி தனது மதுரை அம்மன் உணவகம் சார்பில் 10 லட்சத்திற்கான காசோலை அமைச்சர் உதயநிதி இடம் வழங்கினார். இதற்கு முன்னதாக நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.