உத்தரகாண்ட் மாநிலம் நர்சன் குர்த் பகுதியை சேர்ந்த ஞான தேவி என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இவருக்கு வயது 102. இந்நிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரை உடனே குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட குடும்பத்தினர் இவர் நூற்றாண்டுக்கு மேல் வாழ்ந்ததால் இவரை சிறப்பாக அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரின் இறுதி சடங்கை நடத்த உற்றார் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இறுதி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது இறுதி சடங்கு காக உடலை தூக்கிச் செல்ல வேலைகள் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஞானதேவி உடலில் சலனம் ஏற்பட்டுள்ளது. அவரின் உடல் சிறிது குலுங்கியதும் கண்களை திறந்தார்.

இதனைக் கண்டு பயத்துடன் பலரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இன்னும் சிலர் மகிழ்ச்சியின் அவரைப் பார்த்தனர். சிறிது நேரம் கழித்து சுய நினைவு வந்த அந்த மூதாட்டி அந்த சூழலை உணர்ந்து கொண்டு சுற்றி முற்றி பார்த்தார். பின்னர் அவர் வீடு திரும்பினார். இவர் மீண்டும் எழுந்த சம்பவம் அவரின் குடும்பத்தில் மட்டுமல்லாமல் கிராமத்திலும் கொண்டாடி வருகிறார்கள். இவ்வாறு இறந்து மீண்டும் பாட்டியை தினமும் சென்று பார்த்து ஆசி பெற்று மக்கள் வருகின்றனர்