2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று பிற்பகலில் அலுவல் ஆய்வு குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது ? என்பது குறித்து முடிவுசெய்யப்படும்.

கடந்த ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் படி முதல் முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் வரும்  19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர், தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளில் 10,000 குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடியில் புதுப்பிக்கப்படும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகள் ரூ.71 45 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். 2010 ஆம் ஆண்டு திமுக அரசர் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட செம்மொழிப் பூங்கா கோவையில் அமைக்கப்படும். ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களுக்கான மானியம் ரூ. 10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.