சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது  செப்டம்பர் 15 முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தகவல் வெளியானது.

இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக தற்போது இளம் பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின், இன்று பிற்பகல் 3 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆயிரம் உரிமைத் தொகையை யாருக்கெல்லாம் வழங்கலாம்? எப்படி கணக்கெடுப்பு நடத்துவது? என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கும் பணியானது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதற்கான விவரங்களை சேகரிக்க தமிழக அரசு பணிகளை தொடங்க உள்ளது. மாநிலம் முழுவதும் சிறப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களை மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கு பக்கத்தில் அமைத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலமாக பெண்களிடம் இருந்து உரிய தகவல்கள் கேட்டு பெறப்பட உள்ளது.