தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. செய்முறை தேர்வுகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் பொது தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டிற்கு ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனவும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மதிப்பீட்டுக்குரிய ஆசிரியர்களை தவறாமல் பணிக்கு அனுப்ப வேண்டும் என சிபிஎஸ்இ கூறியுள்ளது. ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதுடன் பள்ளியின் பொதுத்தேர்வு முடிவும் நிறுத்தி வைக்கப்படும் என எச்சரித்துள்ளது.