தமிழகத்தில் சென்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.

அந்த வகையில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வருகை தராத மாணவர்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு அந்ததந்த பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்த அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டு உள்ளது. அதாவது, 10 மற்றும் 12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை வருகிற 20-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.