ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளும் போட்டியிடுகிறது. அதன் பிறகு அதிமுகவில் கேஎஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இன்று மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பேசியதாவது, திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டும் இபிஎஸ் கண் தெரியாத கபோதி போன்று நடந்து கொள்கிறாள். நீங்கள் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் என்ன செய்து கிழிச்சீங்க என்று கூறினார்.