ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றத்தில் இருந்து பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டது. அதன்படி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை கொண்டு வந்ததால் அவர்களுக்கு சில ஆயிரம் மிச்சம் ஆகிறது.

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படுகிறது. கோரிக்கைகள் வைக்கப்படாமலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இப்படி திமுகவின் சாதனை பட்டியல் மிக நீளமானது. உலக அளவில் செஸ் வீரர்கள் பெருமைப்படும் விதமாக செஸ் போட்டிகள் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டது என்று கூறினார். மேலும் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று இத்தனை விதமான நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இவை அனைத்தையும் அறிந்திருந்தும் கண் தெரியாத கபோதி போல எடப்பாடி பழனிச்சாமி நடந்து கொள்கிறார். பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நீங்கள் என்ன செய்து கிழிச்சீங்க என்று கூறினார்.