தர்மபுரி அருகே மிட்டாரெட்டி அள்ளி என்ற பகுதியில் காணாமல் போன 10 வயது சிறுவன் தேடப்பட்டு வந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். மன்மதன் மற்றும் சீதா தம்பதியினருக்கு 10 வயது மகன் இருந்துள்ளார். இவர் திடீரென காணாமல் போன நிலையில் இளங்கோ என்ற இளைஞரை சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரணை செய்தனர்.

]இந்த நிலையில் இளங்கோ சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கிணற்றில் தள்ளிவிட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சிறுவனை கொலை செய்து நாடகமாடிய இளங்கோவை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.