கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாராம் என்ற மகன் உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஜாராமுக்கு வேள்விமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா(27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 10 மாத பெண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த கௌசல்யா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கௌசல்யாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கௌசல்யா உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.