கடலூர் மாவட்டத்தில் உள்ள கவரப்பட்டு ரோடு தெருவில் சௌந்தர பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஆறாம் தேதி சந்தியாவின் தாய் ஆனந்தி மகளிர் உரிமைத்தகான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சந்தியாவிடம் கொடுத்துள்ளார். பின்னர் அதனை மகளிர் குழு கட்டிடத்தில் இருக்கும் பொறுப்பாளரிடம் கொடுக்க சொல்லிவிட்டு வயல் வேலைக்கு சென்றதாக தெரிகிறது.

ஆனால் சந்தியா விண்ணப்பத்தை கொடுக்கவில்லை. பின்னர் வீடு திரும்பிய ஆனந்தி தனது மகளை திட்டினார். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.