நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. இதனால் முன்கூட்டியே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தான் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.