தமிழகத்தில் 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு இன்று காலையிலிருந்து மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான குறுஞ்செய்தி பெண்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படுகிறது. இதில் இன்னும் சில பேருக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லை என கூறுகின்றனர். அவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒரே நேரத்தில் அனைவருக்கும் பணம் செலுத்த முடியாது. எனவே இன்று இரவுக்குள் அனைவருக்கும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வந்து சேரும் என அரசு தெரிவித்துள்ளது.