தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசானது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இன்று பல்வேறு திட்டங்களை  அறிவித்துள்ள முதல்வர் முக ஸ்டாலின், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் சிறுபான்மை மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். மேலும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5 வரை மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்; சிறுபான்மையினர் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கல்வி கடன் தரப்படும் என்று அறிவித்துள்ளார்.