காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு கிலோ மாட்டு சாணம் இரண்டு ரூபாய்க்கு வாங்கப்படும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ளது. ஏற்கெனவே சிலிண்டர் ரூ.500, குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 போன்ற கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டுள்ள காங்கிரஸ், தற்போது மாட்டு சாணத்தையும் விலைக்கு வாங்குவோம் என அறிவித்துள்ளது. 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு நவம்பர் 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.