கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் பாலா. இவரைத் தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் நடித்து மேலும் பிரபலமானார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மறுபக்கம் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்து வருகின்றார்.

அதுமட்டுமல்லாமல் ஏழைகள் மற்றும் முதியோருக்கு உதவும் விதமாக இலவச ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து உதவியுள்ளார். இந்த நிலையில் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில், அந்த ஐந்து ஆம்புலன்ஸ் உடன் எடுத்த புகைப்படங்களை மொத்தமாக அவர் பதிவிட்டு, அவை தான் தன்னுடைய ஐந்து குழந்தைகள் என்று குறிப்பிட்டார்.