நாக்பூரில் வசித்து வருபவர் சஞ்சு பகத். இந்த நபர் கடந்த 36 ஆண்டுகளாக, தனக்கே தெரியாமல் தன்னுடைய வயிற்றில் 2 சிசுக்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் 20 வயதில் அவருக்கு வயிறு திடீரென்று பெரிதாகி உள்ளது. ஆனால் அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். பின்னர்  நாளடைவில் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனைக்கு சென்ற அவரை  மருத்துவர்களபரிசோதித்துள்ளனர்.

அப்போது அவருடைய வயிற்றில் இரு ஆண் சிசுக்கள் உருவாகி, அதற்கு கை, கால்கள் முளைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியதுடன், “லட்சத்தில் ஒருவருக்கு நிகழும் அரிதான நிகழ்வு இது” என ஆச்சரியத்துடன் கூறியுள்ளனர்.