புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு வெளியில் மழை நீர் தேங்கி கிடந்தது. இதனால் மின் கம்பத்தை பிடித்து நடைபாதையில் ஏற முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி சாக்க்ஷி அஹுஜா என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கம்பத்திற்கு வெளியில் மின்சார வயர்கள் அறுந்து கிடந்த நிலையில், அதை தொட்டதும் அவரை மின்சாரம் தாக்கி உள்ளது.

இதுகுறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ஊழியர்களின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என அவரது சகோதரி மாதவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.