இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்திய உணவகம் எனும் உணவகத்தை திறந்துள்ளார். ரெய்னாவுக்கு முன்னதாகவே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலர் உணவக தொழில் செய்து வருகின்றனர். அதாவது, சச்சின் தெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா, ஜாகீர் கான் ஆகியோர் ஹோட்டலில் தொழிலில் ரெய்னாவுக்கு முன்பு இருந்தே கொடிக்கட்டி பறந்து வருகின்றனர்.

அதேபோல் இந்திய அணிக்கு முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று தந்த முன்னாள் கேப்டன் கபில் தேவ், சென்ற 2008 ஆம் வருடம் பாட்னாவில் லெவன் எனும் பெயரில் ஒரு உணவகத்தைத் திறந்தார். இந்திய, பான் ஏசியா மற்றும் கான்டினென்டல் உணவுகளானது இந்த உணவகத்தில் வழங்கப்படுகிறது.