மேற்கு வங்க மாநிலம் பங்குரா பகுதியில் உள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகில் இன்று அதிகாலை 4 மணியளவில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. காரக்பூர் -பாங்குரா ஆட்ரா வழித் தடங்களில் போகும் ரயில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இவ்விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. இதை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிவப்பு சிக்னலில் சரக்கு ரயில் நிற்காமல் சென்றதே ரயில் விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. மெயின் லைனில் போக வேண்டிய சரக்கு ரயில், லூப் லைனில் சென்றதால் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளதாக தென் கிழக்கு ரெயில்வே உறுதிப்படுத்தி இருக்கிறது.