கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக்கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருவதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது குறித்து மணத்தட்டையில் செயல்பட்டு வரும் வெல்கேர் வாட்டர் கம்பெனியில் விசாரித்த போது, தொழில் போட்டியால் சிலர் பழிவாங்கும் நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பி அதிகாரிகளுக்கு புகார் தெரிவிப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.