திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரிக்கல் பட்டியில் கவிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது முதல் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கவிதாவுக்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பருடன் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று கவிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கவிதாவின் தாய் அம்சவேணி தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.