இன்றைய காலகட்டத்தில் உள்ள குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை சிந்திப்பதிலும் முடிவு எடுப்பதிலும் ஒரு படி மேலே நிற்கின்றனர். காரணமே இல்லாத விஷயத்திற்கு கூட அவர்கள் எடுக்கும் முடிவுகள் பலரையும் பதற வைக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் மும்பையில் நிகழ்ந்துள்ளது. மும்பையில் சிறுவன் ஒருவன் ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை என தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. தானே பயந்தரை சேர்ந்த 13 வயது சிறுவன் முடிவெட்டியுள்ளார்.

தலைமுடி மிகவும் குட்டையாக வெட்டப்பட்டதால் சிறுவன் கோபமடைந்து பெற்றோருடன் தகராறு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கோபத்தில் சிறுவன் 16வது மாடியில் உள்ள வீட்டில் குளியலறை ஜன்னல் வழியாக கீழே குதித்துள்ளார். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது