தமிழ்நாட்டில் 575 சார் பதிவாளர் அலுவலகங்களின் மூலமாக வருடத்துக்கு 25 லட்சம் பத்திரங்கள் பதிவாகிறது. இதன் மூலமாக அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்தது. சட்டப்பேரவையில் பட்ஜெட்டில் அறிவித்தபடி 2 சதவீதம் பதிவுக் கட்டண குறைப்பு நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

நிலம் வாங்குபவர்களின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4 லிருந்து 2 சதவீதமாக குறைப்பதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்திருந்தார். இந்த கட்டணக் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வருவதாக பதிவுத்துறை தலைவர் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.