கேரளா மாநிலத்திலுள்ள கொச்சி சர்வதேச விமானம் நிலையத்தில் கடலோர காவல்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சோதனையின் போது ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது ஹெலிகாப்டர் ஓடுபாதைக்கு வெளியே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.