பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இன்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

அந்த வகையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்டத் தலை நகரங்களில் காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் பேசிய பிரியங்கா காந்தி மத்திய அரசுக்கு கடும் கண்டனமத்தை தெரிவித்தார்.

அதாவது “நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த பிரதமரின் மகன் ராகுல் காந்தி. நாட்டின் ஒற்றுமைக்காக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடை பயணம் செய்த அவரால் ஒருபோதும் நாட்டை அவமதிக்க இயலாது. ராகுலை துரோகி என்று சொல்லிய பாஜகவினருக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.